top of page

மேல்மாகாணசபை உறுப்பினருக்கு பல நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டது.

  • Writer: Journalist Mujeeb
    Journalist Mujeeb
  • Jun 27, 2019
  • 1 min read

தொலைத்தொடர்பு சாத­னங்­களின் தொடர்பை முடக்கும் சாத­னங்கள், வாக­னத்தின் வேகத்தைக் கணிக்­க­ மு­டி­யாமல் செய்யும் சாத­னங்கள் ஆகி­ய­வற்றை வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்த மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்­பினர் ஷாபி ரஹீம் அவர்களுக்கு பல நிபந்தனைகளுடன் பிணைவழங்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் இருந்த மேல் மாகாண சபை முன்னாள் உறுப்­பினர் ஷாபி ரஹீம் இன்றய தினம் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் பிரதான நீதவான் ரஜீந்ரா ஜயசூரிய முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது 30,000/= ரூபாய் ரொக்கப்பினையிலும் 500,000/= ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.  

கடந்த மே மாதம் 7ஆம் திகதி நீர்­கொ­ழும்பு பெரிய­முல்­லையில் விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட சோதனை நட­வ­டிக்­கை­யின்­போது பொது­ மக்கள் பாவ­னைக்குத் தடை­செய்­யப்­பட்ட, முப்­ப­டைகள் மற்றும் பொலி­ஸாரின் தொடர்­பா­டலை இடை­யூறு செய்­யக்­கூ­டி­ய அ­தி­சக்தி வாய்ந்த இலத்­தி­ர­னியல் உப­க­ர­ணங்கள்(ஜேமர்) மற்றும் வாக­னத்தின் வேகத்தைக் கணிக்க முடி­யாமல் செய்யும் சாத­னங்கள் ஆகி­ய­வற்­று­டன் மேல் மாகாண சபை முன்னாள் உறுப்­பினர் ஷாபி ரஹீம் கைது செய்­யப்­பட்டிருந்தார். பிணையில் விடுதலை செய்யப்பட்டவருக்கு பல நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது ஷாபி ரஹீம் அவர்களுக்கு பிணை நிற்பவர்கள் நெருங்கிய இரத்த உறவாக இருக்க வேண்டும் என்றும், பிணையில் விடுதலை செய்யப்படுபவர் வெளிநாடு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது என்றும், வாரத்தில் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் காலை 9மணிக்கும் 12 மணிக்கும் இடையில் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாக வேண்டுமென்றும் பிரதான நீதவான் ரஜீந்ரா ஜயசூரிய அவர்கள் அறிவித்தார். 


Comentarios


Recent Posts

இது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் சுதந்திர   ஊடகவியளாலர்  முஸாதிக் முஜீப்யின்  உத்தியோகபூர்வ இணையத்தளம் ஆகும்
Copyright © 2018 Musadeek Mujeeb                                   musadeekmujeeb@gmail.com - All Rights Reserved                                     
bottom of page